கோவை காந்திபுரம் பகுதியில் 62 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது..!

35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 62 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் 62 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரி போலீசாருக்கு காந்திபுரம் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியில் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இரத்தினபுரி போலீசார் உதவி-ஆய்வாளர் செங்கோல்நாதன் தலைமையில் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் மூட்டை ஒன்றை வைத்துக்கொண்டு இரண்டு பேர் சென்று கொண்டு இருந்தனர். அவர்களை நிறுத்தி சோதனை நடத்திய போது மூட்டைக்குள் குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை காவல் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் வெங்கடேஷ் (50) மற்றும் அவரது மகன் வசந்தராஜா (20) என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 62 கிலோ குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...