இதனிடையே, 25,000 தபால் அட்டைகளில் இன்று முதல் கட்டமாக தமிழக முதலமைச்சருக்கு 10000 தபால் அட்டைகளை அனுப்புவதாக தெரிவித்தனர்.
கோவை: கோவையில் ஆயுள் மற்றும் சிறைவாசி கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கடிதம் அனுப்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் 10000 தபால்களை முதலமைச்சருக்கு அனுப்பினர்.
"நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், சட்டபிரிவு 161ன் சட்ட படியும் அனைத்து முஸ்லீம் மற்றும் ஆயுள் சிறைவாசிகளையும் கருணையோடு உடனாடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் அனுப்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 10க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டு, ஆயிரக்கணக்கான தபால்களை கைகளில் ஏந்தி தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்டிபிஐ கட்சியின் கோவை மத்திய மாவட்ட செயலாளர் முகமது இஷக் கூறியதாவது :-
தமிழகம் முழுவதும் சிறையிலே 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வருகின்ற முஸ்ஸீம் சிறைவாசிகள் மற்றும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேணடும் என்றும், எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பல்வேறு போராட்டம், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்கங்கள் நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக, தமிழக முதலமைச்சருக்கு சட்டத்தின் அடிப்படையிலும் 161ன் சட்டபிரிவின் படியும் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் 25000 தாபல் அட்டடைகளை கோவையிலிருந்து அனுப்பப்படும் என்றும், இன்று முதல் கட்டமாக தமிழக முதலமைச்சருக்கு 10000 தபால் அட்டைகளை அனுப்புவதாக தெரிவித்தார் .
மேலும், 38 முஸ்லீம் சிறைவாசிகளும் 7 தமிழர்களும் கருணையின் அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.