கோவை தொண்டாமுத்தூர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை..!

இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார், சடலமாக மீட்கப்பட்ட அந்த முதியவர் யார்? எதற்காக அந்தப் பகுதிக்கு வந்தார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர், மலையடிவாரம், தனியார் தோட்டத்திற்கு செல்லும் சாலையில் சுமார் 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.



இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தொண்டாமுத்தூர் போலீஸ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கோமதிக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கோமதி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த தொண்டாமுத்தூர் போலீசார், சடலமாக மீட்கப்பட்ட அந்த முதியவர் யார்? எதற்காக அந்தப் பகுதிக்கு வந்தார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...