இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார், சடலமாக மீட்கப்பட்ட அந்த முதியவர் யார்? எதற்காக அந்தப் பகுதிக்கு வந்தார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர், மலையடிவாரம், தனியார் தோட்டத்திற்கு செல்லும் சாலையில் சுமார் 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தொண்டாமுத்தூர் போலீஸ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கோமதிக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கோமதி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த தொண்டாமுத்தூர் போலீசார், சடலமாக மீட்கப்பட்ட அந்த முதியவர் யார்? எதற்காக அந்தப் பகுதிக்கு வந்தார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர், மலையடிவாரம், தனியார் தோட்டத்திற்கு செல்லும் சாலையில் சுமார் 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தொண்டாமுத்தூர் போலீஸ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கோமதிக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கோமதி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த தொண்டாமுத்தூர் போலீசார், சடலமாக மீட்கப்பட்ட அந்த முதியவர் யார்? எதற்காக அந்தப் பகுதிக்கு வந்தார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.