தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகள் கோவையில் இன்று துவக்கம்


கோவையில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 700 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

கோவையில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகள் இந்திய வலுதூக்கும் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியானது கோவை சித்ரா பகுதியிலுள்ள தனியார் அரங்கில் இன்று துவங்கி வரும் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நாடுமுழுவதும் 28 மாநிலங்களை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 18 முதல் 23 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 350 ஆண்கள் மற்றும் 150 பெண்களும், 40 முதல் 70 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மொத்தம் 200 வீரர் மற்றும் வீராங்கனைகள் என 700 பேர் இந்த போட்டிகளில் பங்குபெற உள்ளனர். இதன் முதல் நாளான இன்று 53 கிலோ மற்றும் 59 கிலோ எடைப் பிரிவினருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து 66 கிலோ மற்றும் 120 கிலோ எடைப்பிரிவு என 9 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற உள்ளது.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...