கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் - பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம்..!

மேலும், வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள யாகசாலை பூஜை, கொடியிறக்கும் நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவுக்கு வரும் என கோயில் நிர்வாகிகள் தகவல்.


கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திரம் தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திரத் தேரோட்ட விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சிறப்பு ஆராதனைகள், வழிபாடுகள், பூஜைகள் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன.

நேற்று முன்தினம் பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் வெள்ளையானை சேவை நடந்தது. ஏழாம் நாளான நேற்று, திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம் நடந்தது.



தேர்த்திருவிழாவை முன்னிட்டு மூலவருக்கு மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டாடை மற்றும் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சோமாஸ்கந்தர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.

அப்போது, பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

பின்னர், மாலை 4 மணிக்கு தேர்நிலைத் திடலில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பிள்ளையார் பீடம் பொன்மணி வாசக சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் தேரோட்டத்தை வடம் பிடித்துத் தொடங்கி வைத்தனர்.

தேர்நிலைத் திடலிலிருந்து புறப்பட்ட தேர் தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் கிழக்கு வீதியில் உள்ள திடலுக்கு வந்தடைந்தது. தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பட்டீஸ்வரரை போற்றி கோஷங்களை எழுப்பினர்.

மேலும், வரும் 18ம் தேதி, நடைபெறவுள்ள யாகசாலை பூஜையுடன், கொடியிறக்கும் நிகழ்ச்சியானது நடைபெறும் எனவும், அத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவுக்கு வரும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...