சின்னதடாகத்தில்‌ விளையாட்டு உட்கட்டமைப்புக்குத் தேவையான உபகரணங்கள் வழங்குவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

சின்னதடாகத்தில்‌ உள்ள அரசு பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ விளையாட்டு உட்கட்டமைப்புக்குத் தேவையான உபகரணங்கள் வழங்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அறம்‌ பவுண்டேஷன்‌ சாரிடபிள்‌ டிரஸ்ட்‌ அறங்காவலர்‌ கையெழுத்திட்டு அதனை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வழங்கினார்‌.


கோவை: சின்னதடாகத்தில்‌ விளையாட்டு உட்கட்டமைப்புக்குத் தேவையான உபகரணங்கள் வழங்குவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

சின்னதடாகத்தில்‌ உள்ள அரசு பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ விளையாட்டு உட்கட்டமைப்புக்குத் தேவையான உபகரணங்கள்‌, பயிற்சியாளர்களை கொண்டு தரமான பயிற்சி மற்றும்‌ தேவையான வசதிகளை எக்ஸ்பிலியோ சொல்யூஷ்ன்ஸ்‌ லிமிடெட்‌ என்ற நிறுவனத்தின்‌ CRS நிதிமூலமாக மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அறம்‌ பவுண்டேஷன்‌ சாரிடபிள்‌ டிரஸ்ட்‌ அறங்காவலர்‌ லதா சுந்தரம்‌ கையெழுத்திட்டு அதனை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ வழங்கினார்‌.

அறம்‌ பவுண்டேஷன்‌ சாரிடபிள்‌ டிரஸ்ட்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ ஆதரவுடன்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, சின்னதடாகத்தில்‌ உள்ள அரசு பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியை தேர்ந்தெடுத்து விளையாட்டு உட்கட்டமைப்புக்கு தேவையான உபகரணங்கள்‌, பயிற்சியாளர்களை கொண்டு தரமான பயிற்சி மற்றும்‌ தேவையான வசதிகளை எக்ஸ்பிலியோ சொல்யூஷ்ன்ஸ்‌ லிமிடெட்‌ என்ற நிறுவனத்தின்‌ CSR நிதிமூலமாக அமைத்துக்‌ கொடுக்கும்‌ செயல்‌ திட்டம்‌ தீட்டப்பட்டுள்ளது.

இதன்‌ மூலம்‌ 12 கிராமங்களைச்‌ சேர்ந்த 520 மாணவியர்களுக்கு விளையாட்டு வசதிகள்‌ அளிக்கப்படும்‌ உடல்‌ ஆரோக்கியம்‌, மன ஆரோக்கியம்‌ மற்றும்‌ மறைந்திருக்கும்‌ திறமைகளை வெளி கொணர்வது பல்வேறு போட்டிகளில்‌ பங்கு கொள்வது அதன்‌ மூலம்‌ வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது போன்ற நோக்கங்களுடன்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தபடும்‌. இந்த ஆண்டு ஒரு கைப்பந்து மைதானம்‌, கூடைபந்து மைதானம்‌, கபடி ஆடுகளம்‌ மற்றும்‌ செயல்பாடுகளுக்கான அரங்கம்‌ ஆகியவை உருவாக்கப்படும்‌. வரும்‌ ஆண்டு ஜுன்‌ மாதம்‌ முதல்‌ பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும்‌.

இந்த வசதிகள்‌ அருகிலுள்ள அரசு பள்ளி மாணவர்கள்‌ பயன்படுத்த ஏதுவாக அமையும்‌. மேலும்‌ வருங்காலத்தில்‌ இவ்வசதிகள்‌ மேம்படுத்தப்படும்‌ வகையில்‌ அமைக்கப்படும்‌. இதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்‌, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்‌ கீதா மற்றும்‌ அறம்‌ பவுண்டேஷன்‌ சாரிடபிள்‌ டிரஸ்ட்‌ அறங்காவலர்‌ லதா சுந்தரம்‌ கையெழுத்திட்டு அதனை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., அவர்களிடம்‌ வழங்கினார்‌. உடன்‌ எக்ஸ்பிலியோ சொல்யூஷ்ன்ஸ்‌ லிமிடெட்‌ கோவை மையத்தலைவர்‌ ஸ்ரீ ராம்‌ உடனிருந்தார்‌.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...