கோவை மாநகராட்சியில் சுகாதார நல மையம் கட்டும் பணி மற்றும் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரம்..!

மேலும், மாநாராட்சி சுகாதாரப் பணியாளர்களால் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சியில் சுகாதார நல மையம் கட்டும் பணி மற்றும் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ புதிய வார்டு எண்‌. 40க்குட்பட்ட வீரகேரளம்‌ பகுதியில்‌ 15வது நிதிக்குழு தேசிய சுகாதார பணி திட்டம்‌ 2021-2022ன்கீழ்‌, ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்ப்புற சுகாதார நல மையம்‌ கட்டும்‌ பணி நடைபெற்று வருகிறது.



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌ 19க்குட்பட்ட வீதியில்‌ சாலையோரங்களிலுள்ள புற்கள்‌ மற்றும்‌ குப்பைகளை மாநகராட்சி சுகாதாரப்‌ பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண். 38க்குட்பட்ட மருதமலை அடிவாரம் பகுதியில் 15வது நிதிக்குழு தேசிய சுகாதார பணி திட்டம் 2021-2022ன்கீழ், ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார நல மையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் புதிய வார்டு எண் 54க்குட்பட்ட துளசியம்மாள் லே - அவுட் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 19, 60க்குட்பட்ட வீதிகளில் மாநாராட்சி சுகாதாரப் பணியாளர்களால் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 19க்குட்பட்ட கணபதி, ஸ்ரீலட்சுமி நகரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...