கோவை இராஜ வீதி அருகே ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகள் விற்ற 40 கடைகளுக்கு அபராதம்..!

இதனிடையே, மேற்கொண்ட ஆய்வில் சுமார் 75 கிலோ நெகிழிப்பைகள் கைப்பற்றப்பட்டு ரூ. 12,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை இராஜ வீதி அருகே ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி பைகள் விற்ற 40 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் இராஜ வீதி, ஒப்பணகாரவீதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளை விற்ற 40 கடைகளில் ஆய்வு செய்ததில் சுமார் 75 கிலோ கைப்பற்றப்பட்டு, ரூ. 12,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட நெகிழிப் பைகளை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர், மண்டல சுகாதார அலுவலர் திருமால், சுகாதார ஆய்வாளர் சலைத்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...