இதனிடையே, மேற்கொண்ட ஆய்வில் சுமார் 75 கிலோ நெகிழிப்பைகள் கைப்பற்றப்பட்டு ரூ. 12,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை இராஜ வீதி அருகே ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி பைகள் விற்ற 40 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் இராஜ வீதி, ஒப்பணகாரவீதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளை விற்ற 40 கடைகளில் ஆய்வு செய்ததில் சுமார் 75 கிலோ கைப்பற்றப்பட்டு, ரூ. 12,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட நெகிழிப் பைகளை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர், மண்டல சுகாதார அலுவலர் திருமால், சுகாதார ஆய்வாளர் சலைத்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் இராஜ வீதி, ஒப்பணகாரவீதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளை விற்ற 40 கடைகளில் ஆய்வு செய்ததில் சுமார் 75 கிலோ கைப்பற்றப்பட்டு, ரூ. 12,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட நெகிழிப் பைகளை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர், மண்டல சுகாதார அலுவலர் திருமால், சுகாதார ஆய்வாளர் சலைத்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.