கோவை சுல்தான்பேட்டை அருகே குடியிருப்பு அருகே உள்ள புதரில் பதுக்கி வைத்திருந்த 70-கிலோ கஞ்சா பறிமுதல் - வடமாநில இளைஞர்கள் கைது..!

வடமாநில இளைஞர்களிடமிருந்த 70-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை சுல்தான்பேட்டை அருகே குடியிருப்பு அருகே உள்ள புதரில் பதுக்கி வைத்திருந்த 70-கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

கோவையில் தங்கி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சுல்தான்பேட்டை அருகே சந்தேகத்திடமாக சிலர் சுற்றிவருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சிலைக்கரைசல், லட்சுமி நகர் பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் அங்குள்ள ஒரு குடியிருப்பு அருகே உள்ள முட்புதரில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட போது சுமார் 70-கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிபராம் மகரானா(40). மற்றும் சுதர்சன் புஹான் (41). என்பதும் இவர்கள் இருவரும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளிகளுக்குக் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.



இதையடுத்து அவர்களிடமிருந்த 70-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...