கோவையில் ரூ.20-லட்சம் மதிப்பில் மத்திய அரசின் நிதி உதவியுடன் இளம் வயதினருக்கான ஆய்வகம் திறப்பு

கோவையில் Nice Academy பள்ளியில் ரூபாய் 20-லட்சம் மத்திய அரசின் நிதி உதவியுடன் இளம் வயதினருக்கான "Atal Tinkering Lab (ATL)" ஆய்வகத்தைக் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று திறந்து வைத்தார்.


கோவை: கோவையில் ரூ.20-லட்சம் மதிப்பில் மத்திய அரசின் நிதி உதவியுடன் இளம் வயதினருக்கான ஆய்வகத்தைக் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று திறந்து வைத்தார்.

கோவையில் Nice Academy பள்ளியில் ரூபாய் 20-லட்சம் மத்திய அரசின் நிதி உதவியுடன் இளம் வயதினருக்கான "Atal Tinkering Lab (ATL)"ஆய்வகத்தைக் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று திறந்து வைத்தார்.

மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சித் திறனை வளர்க்கப் பிரதமர் நரேந்திர மோடியால் நாடு முழுவதும் அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தலா ரூ.20 லட்சத்தில் ‘Atal Tinkering Lab (ATL) அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று கோவை போத்தனூர் உள்ள Nice Academy பள்ளியில் இந்த ஆய்வகம் மாணவர்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டது.



இந்த ஆய்வகம் மாணவ-மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கவும், ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தவும் அமைக்கப்பட்ட இந்த ஆய்வகம், ரோபோட்டிக் மற்றும் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கும் வகையிலான நவீன உபகரணங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசிய போது:-

இந்தியா முழுவதும் உயர்நிலைப்பள்ளி குழந்தைகளிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (Science Engineering Technology and Mathematics-STEM) ஆகியவற்றின் கற்றலை வளர்ப்பதற்காக அடல் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.



பிரதமருடைய புதிய இந்தியாவை உருவாக்கும் உன்னதமான இத்திட்டம் இளைய சமுதாயம் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறையில் சாதிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூட்டத்தில் பேசினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...