வால்பாறை நகராட்சி தலைவராக அழகு சுந்தரவள்ளி பொறுப்பேற்றார்

14-வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தரவள்ளி நகர மன்ற தலைவர் தேர்தலில் 21-க்கு 12-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தலைவர் பொறுப்பேற்றார்.


கோவை: வால்பாறை நகர மன்ற தலைவராக 14-வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தரவள்ளி பதவியேற்றார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 21-வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் 20-திமுகவினரும் 1-அதிமுகவினர் தேர்தலில் வெற்றி பெற்றனர். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி நகர் தலைவர் பதவிக்கு திமுக கட்சித் தலைமை 10-வது வார்டு உறுப்பினர் காமாட்சி என்பவரை வேட்பாளராக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து தலைவர் பதவிக்கு திமுக தலைமை அறிவித்தவரை எதிர்த்து திமுக கட்சியைச் சேர்ந்த 14-வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தர வள்ளி என்பவர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து நகராட்சி அலுவலகத்தில் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தல் இறுதி வெற்றி அறிவிப்பு முன்னதாக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு, தலைமை அறிவிக்காத வேட்பாளருக்கு இரு தரப்பும் ஆதரவாளர்களுக்கு இடையே, சட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாகத் தேர்தல் மறு தேதி அறிவிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் திடீர் நகர உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.



இதில் 6- நகர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



14-வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தர வள்ளி நகர மன்ற தலைவர் தேர்தலில் 12-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 4-ம் தேதி நடைபெற்ற தலைவர் தேர்தலில் அழகு சுந்தரவள்ளி 12-வாக்குகள் பெற்றார். தலைமை அறிவித்த காமாட்சி 9-வாக்குகள் பெற்றார். வெற்றியை அறிவிக்கும் நிலையில் இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையைச் சட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாக வெற்றியை அறிவிக்கமுடியாமல் தேர்தல் மறு தேதியில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்ததாக ஆணையாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார். இந்நிலையில் அழகுசுந்தரவள்ளி தலைவர் பொறுப்பேற்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...