14-வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தரவள்ளி நகர மன்ற தலைவர் தேர்தலில் 21-க்கு 12-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தலைவர் பொறுப்பேற்றார்.
கோவை: வால்பாறை நகர மன்ற தலைவராக 14-வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தரவள்ளி பதவியேற்றார்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 21-வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் 20-திமுகவினரும் 1-அதிமுகவினர் தேர்தலில் வெற்றி பெற்றனர். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி நகர் தலைவர் பதவிக்கு திமுக கட்சித் தலைமை 10-வது வார்டு உறுப்பினர் காமாட்சி என்பவரை வேட்பாளராக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து தலைவர் பதவிக்கு திமுக தலைமை அறிவித்தவரை எதிர்த்து திமுக கட்சியைச் சேர்ந்த 14-வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தர வள்ளி என்பவர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து நகராட்சி அலுவலகத்தில் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தல் இறுதி வெற்றி அறிவிப்பு முன்னதாக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு, தலைமை அறிவிக்காத வேட்பாளருக்கு இரு தரப்பும் ஆதரவாளர்களுக்கு இடையே, சட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாகத் தேர்தல் மறு தேதி அறிவிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் திடீர் நகர உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் 6- நகர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

14-வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தர வள்ளி நகர மன்ற தலைவர் தேர்தலில் 12-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 4-ம் தேதி நடைபெற்ற தலைவர் தேர்தலில் அழகு சுந்தரவள்ளி 12-வாக்குகள் பெற்றார். தலைமை அறிவித்த காமாட்சி 9-வாக்குகள் பெற்றார். வெற்றியை அறிவிக்கும் நிலையில் இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையைச் சட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாக வெற்றியை அறிவிக்கமுடியாமல் தேர்தல் மறு தேதியில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்ததாக ஆணையாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார். இந்நிலையில் அழகுசுந்தரவள்ளி தலைவர் பொறுப்பேற்றார்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 21-வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் 20-திமுகவினரும் 1-அதிமுகவினர் தேர்தலில் வெற்றி பெற்றனர். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி நகர் தலைவர் பதவிக்கு திமுக கட்சித் தலைமை 10-வது வார்டு உறுப்பினர் காமாட்சி என்பவரை வேட்பாளராக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து தலைவர் பதவிக்கு திமுக தலைமை அறிவித்தவரை எதிர்த்து திமுக கட்சியைச் சேர்ந்த 14-வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தர வள்ளி என்பவர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து நகராட்சி அலுவலகத்தில் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தல் இறுதி வெற்றி அறிவிப்பு முன்னதாக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு, தலைமை அறிவிக்காத வேட்பாளருக்கு இரு தரப்பும் ஆதரவாளர்களுக்கு இடையே, சட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாகத் தேர்தல் மறு தேதி அறிவிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் திடீர் நகர உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் 6- நகர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
14-வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தர வள்ளி நகர மன்ற தலைவர் தேர்தலில் 12-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 4-ம் தேதி நடைபெற்ற தலைவர் தேர்தலில் அழகு சுந்தரவள்ளி 12-வாக்குகள் பெற்றார். தலைமை அறிவித்த காமாட்சி 9-வாக்குகள் பெற்றார். வெற்றியை அறிவிக்கும் நிலையில் இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையைச் சட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாக வெற்றியை அறிவிக்கமுடியாமல் தேர்தல் மறு தேதியில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்ததாக ஆணையாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார். இந்நிலையில் அழகுசுந்தரவள்ளி தலைவர் பொறுப்பேற்றார்.