கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் மற்றும் சுகாதார நல மையங்கள் கட்டும் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு..!

இந்த ஆய்வின்போது, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கே.கருப்புசாமி, உதவிப் பொறியாளர்‌ கனகராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.


கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் மற்றும் சுகாதார நல மையம் கட்டும் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 92க்குட்பட்ட பி.கே.புதூர்‌ பிரதான சாலை மற்றும்‌ முத்துசாமி சாலையில்‌ 1277 மீட்டர் தொலைவிற்கு ரூ.69.92 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சாலைப் பணிகள்‌ நடைபெற்றுவருவதையும்‌, வார்டு எண்‌. 90க்குட்பட்ட கோவைப்புதூர் சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகம்‌ அருகில் 15வது நிதிக்குழு தேசிய சுகாதார பணி திட்டம்‌ 2021-2022ன்கீழ்‌, ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்ப்புற சுகாதார நல மையம்‌ கட்டும்‌ பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌ ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்‌.



அதனைத்‌ தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 92க்குட்பட்ட பாலக்காடு பிரதான சாலை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம்‌ அருகில்‌ 15வது நிதிக்குழு தேசிய சுகாதார பணி திட்டம்‌ 2021-2022ன்கீழ்‌, ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்ப்புற சுகாதார நல மையம்‌ கட்டும்‌ பணியை மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

இந்த ஆய்வின்போது, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கே.கருப்புசாமி, உதவிப் பொறியாளர்‌ கனகராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...