திருப்பூரில் அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிக் கொண்ட இளைஞன் - அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு..!

கடந்த ஒரு மாத காலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியத்தால், நீதிமன்ற ஊழியர், பனியன் தொழிலாளி என 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.



திருப்பூர்: திருப்பூரில் அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிக் கொண்ட இளைஞன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் .

திருப்பூர் கோவில்வழி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.



இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக பார்க் ரோடு சாலையில் வந்து கொண்டிருந்த போது அவரின் இடது புறமாக வந்த அரசு பேருந்து திடீரென்று வலது புறமாக (ஒரு வழிச்சாலையில் சென்றுள்ளது) இதில் பேருந்தின் பின் சக்கரத்தில் வாகனத்துடன் சிக்கிக்கொண்டார்.



இதையடுத்து, பொதுமக்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அரசு பேருந்து நிறுத்தப்பட்டது. கார்த்தி சுதாரித்துக்கொண்டு லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காயம் அடைந்த கார்த்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



இதனைத் தொடர்ந்து, பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகனம் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் பேருந்தின் அடியிலிருந்து எடுக்கப்பட்டது.



இந்த விபத்தின் காரணமாக பார்க் ரோடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த ஒரு மாத காலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியத்தால், நீதிமன்ற ஊழியர், பனியன் தொழிலாளி என 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...