நீலகிரி பந்தலூரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பல ஏக்கர் நிலப்பரப்பு பாதிப்பு..!

பந்தலூர் - கோழிக்கோடு சாலையோர வனத்தில் திடீரென பரவிய தீயை வனத் துறையினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து நான்கு மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.


நீலகிரி: நீலகிரி பந்தலூரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பல ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் நேற்று ஏற்பட்ட காட்டுத் தீயால், பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது. நீலகிரி மாவட்டம், பந்தலூர், கூடலூர் வனப் பகுதிகள் வறட்சியில் சிக்கி உள்ளன. மரம் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வனத்துக்கு தீ வைக்க துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று பந்தலூர் - கோழிக்கோடு சாலையோர வனத்தில் திடீரென தீ பரவியது. வனத் துறையினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து, நான்கு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். கூடலூர் ஆமைக்குளம், அரசு கலைக் கல்லூரி வளாகத்தை ஒட்டிய வனப் பகுதியிலும் நேற்று காலை காட்டு தீ ஏற்பட்டது. வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில்,

'தீயால், பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து, உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீ வைக்கும் மர்ம நபர்கள் குறித்து, மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள் மலையில் ஏற்பட்ட காட்டுத் தீ, 500 ஏக்கருக்கு மேல் பரவியது. கடந்த இரண்டு நாட்களாகக் கள பணியாளர்கள், தீயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். இதுவரை மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. நேற்று ஒரே நாளில் 114 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில், 52 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுவதால், மலை சார்ந்த வனப் பகுதிகளில் சுற்றுலா பயணியரை அனுமதிப்பதை உள்ளூர் அளவில் கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...