கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் குடிபோதையில் தகராறு செய்த மகனை குத்தி கொன்ற தந்தை - காவல் நிலையத்தில் சரண்..!

மேலும், தனிப்பிரிவு விசாரணையில் இறந்து போன ஷாஜகான் பேரில் கோவை மாநகர காவல் நிலையத்தில் குண்டாஸ் சட்டம் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.



கோவை: கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் குடிபோதையில் தகராறு செய்த மகனை குத்தி கொன்ற தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமதுரபீக் (50). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணிக்கு வீட்டிற்கு வந்த முகமது ரபீக்கின் மகன் ஷாஜகான் (22) தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த முகமது ரபீக்குடிபோதையில் இருந்த தனது மகன் ஷாஜகானை ஏன் இப்படி அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்கிறாய் என்று கேட்டுள்ளார்.

இதனையடுத்து, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு முகமது ரபிக் வீட்டில் இருந்த காய் நறுக்கும் கத்தியை எடுத்து தனது மகன் ஷாஜகானின் இடது பக்க வயிற்றில் குத்தியும், முதுகின் பின்புறம் இரண்டு இடங்களில் கத்தியால் கீரியதில் கீழே விழுந்த ஷாஜகான் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதையடுத்து, முகமது ரபீக் தனது மனைவி உமேராவுடன் துடியலூர் காவல் நிலையம் வந்து சொன்னதின் பேரில் துடியலூர் உதவி ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் துடியலூர் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை செய்து ஷாஜகான் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், தனிப்பிரிவு விசாரணையில் இறந்துபோன ஷாஜகான் என்பவருக்கு கோவை மாநகர காவல் நிலையத்தில் குண்டாஸ் சட்டம் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. அதிகாலையில் தந்தை மகனை குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...