கோவை மதுக்கரை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு..!

மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மதுக்கரை அருகே தூக்கில் தொங்கியவாறு அடையாளம் தெரியாத முதியவர் உடலை சடலமாக மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மதுக்கரை சூட்டிங் ரேஞ் சாலை அருகே உள்ள மரத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், நிகழ்விடத்தில் ஏதேனும் தடையங்கள் உள்ளதா என சோதனை செய்தனர். இறந்தவர் யார் ? எங்கிருந்து வந்தார் என்ற விபரங்கள் கிடைக்காத நிலையில், முதியவரின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...