கை, கால்கள் மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலாளி நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், பாலு கடந்த 4ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் சண்முக வேலாயுதம் தோட்டத்தில் தேங்காய் பறிக்கும் பணிக்காக சென்றுள்ளார். அப்போது ஒரு மரத்தில் ஏறி தேங்காய் போட்ட போது, திடீரென தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
இதையடுத்து, அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கை, கால்கள் மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலு நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அவரது மகன் பிரகாஷ் கொடுத்த புகார் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், பாலு கடந்த 4ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் சண்முக வேலாயுதம் தோட்டத்தில் தேங்காய் பறிக்கும் பணிக்காக சென்றுள்ளார். அப்போது ஒரு மரத்தில் ஏறி தேங்காய் போட்ட போது, திடீரென தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
இதையடுத்து, அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கை, கால்கள் மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலு நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அவரது மகன் பிரகாஷ் கொடுத்த புகார் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.