கோவையில் சமையல் செய்த போது சேலையில் தீப்பற்றி விபத்து - மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி..!

60 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வள்ளியம்மாள், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை சூலூர் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி வள்ளியம்மாள் (83). பழனிச்சாமி இறந்ததால், வள்ளியம்மாள் தனது மகன் ராஜேந்திரன் வீட்டிலேயே தனியான அறையில் வசித்து வந்தார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் வள்ளியம்மாள் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, அவரது சேலையில் தீடீரென தீப்பிடித்து உடல் முழுவதும் எரியத் துவங்கியது. இதையடுத்து, வள்ளியம்மாள் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். 

பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 60 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வள்ளியம்மாள், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...