கோவையில் பெண்ணிடம்  செயினை பறித்து தப்ப முயன்ற கொள்ளையனை மடக்கி பிடித்த கணவன் - மகள்..!  போலீசார் பாராட்டு.

மத்திய அரசு இல்லாத மாநிலங்களில், சிறு சிறு விஷயங்கள் கூட பெரிதாக முன்னிறுத்தப்படுகிறது. என்னை பொருத்தவரை அனைத்து ஆளுநர்களும், மக்களுக்காக செயலாற்றுப்பவர்கள் என்பதுதான் எனது கருத்து, என்று தெரிவித்தார்.


கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம் உழைப்பாளர் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரதுமனைவி லீலாவதி. நேற்று அதே பகுதியில் உள்ள கடைக்கு குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் லீலாவதியின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு தங்க செயினை பறித்து கொண்டு தப்ப முயன்றார்.

அப்போது, லீலாவதி சத்தம் போடவே அருகில் இருந்த அவரது கணவர் மற்றும் மகள் இருவரும் திருடனின் இருசக்கர வாகனத்தைஇழுத்து கீழே தள்ளி விட்டனர். இதில், தடுமாறி கீழே விழுந்த திருடன் அருகில் இருந்த கோவிலுக்குள் சென்று பதுங்கி கொண்டான். அங்கு கூடிய பொது மக்கள் திருடனை பிடித்து துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

பிடிபட்ட நபரிடமிருந்து11 பவுன் மதிப்புள்ள இரண்டு தங்க செயினை மீட்ட போலீசார் வழிப்பறி கொள்ளையனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், கொள்ளையன் வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பக்கிரிசாமி என்பதும் துடியலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. 

பிடிபட்ட நபர், வேறு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளவரா? என்ற போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், பெண்ணின் செயினை பறித்து விட்டு தப்ப முயன்ற திருடனை தைரியமாக மடக்கி பிடித்த மகள் மற்றும் கணவனை துடியலூர் போலீஸார் பாராட்டினார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...