தொழிலாளர்கள் நலனைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் மார்ச் 28, 29 தேதிகளில் நடக்கிறது.
கோவை: அகில இந்திய பொது வேலைநிறுத்தம் தொடர்பாகக் கோவை ஏஐடியுசி அலுவலகத்தில் கோரிக்கைகள் விளக்க மண்டல மாநாடு நடைப்பெற்றது.
இதுகுறித்த வேலைநிறுத்த தயாரிப்பு மற்றும் கோரிக்கைகள் விளக்க மண்டல மாநாடு கோவை ஏஐடியுசி அலுவலகத்தில் இன்று நடந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எல்.பி.எப்., தொழிற்சங்கம் சார்பில் வெ.கிருஷ்ணசாமி, ஜி.முருகேசன், கா.பிரபாகரன், ஆனந்தன், ரங்கசாமி, ஆர்.சுந்தரமூர்த்தி, எஸ்.தமிழரசி, நாமக்கல் சே.கோபால், செ.தங்கமுத்து உள்ளிட்ட மத்திய மாநில பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோவை மண்டல நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் நான்கையும் மத்திய அரசு கைவிட வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது. கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தவேண்டும். ஏற்கனவே இயங்கி வரும் வாரியங்களைச் சீர்குலைக்கக் கூடாது.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பணி நிரந்தர படுத்த வேண்டும். அதுவரை சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில்களை, தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும்.
தொழில்துறைக்குத் தேவையான மூலப்பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கப்பட்டது.
இதுகுறித்த வேலைநிறுத்த தயாரிப்பு மற்றும் கோரிக்கைகள் விளக்க மண்டல மாநாடு கோவை ஏஐடியுசி அலுவலகத்தில் இன்று நடந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எல்.பி.எப்., தொழிற்சங்கம் சார்பில் வெ.கிருஷ்ணசாமி, ஜி.முருகேசன், கா.பிரபாகரன், ஆனந்தன், ரங்கசாமி, ஆர்.சுந்தரமூர்த்தி, எஸ்.தமிழரசி, நாமக்கல் சே.கோபால், செ.தங்கமுத்து உள்ளிட்ட மத்திய மாநில பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோவை மண்டல நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் நான்கையும் மத்திய அரசு கைவிட வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது. கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தவேண்டும். ஏற்கனவே இயங்கி வரும் வாரியங்களைச் சீர்குலைக்கக் கூடாது.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பணி நிரந்தர படுத்த வேண்டும். அதுவரை சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில்களை, தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும்.
தொழில்துறைக்குத் தேவையான மூலப்பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கப்பட்டது.