தேசிய அளவில் பல்கலை.,க்கு இடையேயான போட்டிகளின் பங்கேற்க கோவை வந்துள்ள வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என புகார்

கோவை நேரு விளையாட்டு அரங்கில் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான 77-வது தடகள விளையாட்டு போட்டிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. 

அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக நடத்தப்படும் இப்போட்டிகளில், நாடு முழுவதும் உள்ள 189 பல்கலைக் கழகங்களை சேர்ந்த 2605 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற 46 போட்டிகள் நடைபெற உள்ளது. 

இதன் முதல் நாளான நேற்று ஓட்டப்பந்தயம்,  நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் போன்ற போட்டிகளுக்கான தேர்வு  சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் வருகின்ற 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தடகள போட்டிகளை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் இன்று துவங்கி வைத்தார். 

இதனிடையே, தடகள போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள பல்வேறு மாநில வீரர், வீராங்கனைகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விளையாட்டு மைதானத்தில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும், மைதானத்தில் இருந்து வெகு தொலைவில் வீரர்களுக்கு தங்குமிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தடகள வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

மேலும், தங்குமிடங்களிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும், இதனால் தனியாக அறை எடுத்து தங்க வேண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...