நான்கு கரீபியன் நாடுகள் 'மண் காப்போம்' இயக்கத்துடன் சத்குரு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

4 நாடுகளின்‌ தலைவர்களுக்கும்‌ கரீபியன்‌ நாடுகளின்‌ மண்‌ வளத்தை மீட்டெடுப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள்‌ அடங்கய புத்தகத்தை சத்குரு வழங்கினார்‌.



கோவை: ஆன்டிகுவா & பார்படா, டொமினிகா, செயின்ட்‌ லூசியா, செயின்ட்‌ கிட்ஸ்‌ & நெவிஸ்‌ ஆகிய 4 கரீபியன்‌ நாடுகளின்‌ பிரதமர்கள்‌ மற்றும்‌ அமைச்சர்கள்‌ சத்குரு தொடங்கி உள்ள மண்‌ காப்போம்‌ இயக்கத்துடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்‌ மேற்கொள்ளும்‌ வரலாற்று தருணத்தில்‌ பங்கெடுத்தனர்‌.

"சோகா இசையின்‌ அரசன்‌” (Machel Montano) என புகழப்படும்‌ சர்வதேச பாடகர்‌ மெச்சல்‌ மோண்டனோ (Machel Montano) இந்த ஒப்பந்தங்கள்‌ கையெழுத்தாவதில்‌ முக்கிய பங்காற்றியுள்ளார்‌. அவர்‌ தனது இசையின்‌ மூலம்‌ மண்‌ வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏராளமான மக்களிடம்‌ கொண்டு செல்ல உறுதி ஏற்றுள்ளார்‌.

ஆன்மகுவா & பார்படா நாட்டின்‌ பிரதமர்‌ காஸ்டன்‌ பிரவுன்‌ பேசும்‌ போது, “மண்‌ காப்போம்‌ இயக்கத்துடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ மேற்கொள்வதில்‌ மகிழ்ச்சி அடைகிறோம்‌. மண்‌ வளம்‌ இழந்து அழிவை நோக்கி செல்குறது. இது நாம்‌ வாழும்‌ பூமிக்கு எதிரான மாபெரும்‌ அச்சுறுத்தல்‌ ஆகும்‌. 30 வருடங்களுக்கு முன்பு பருவநிலை மாற்றம்‌ பெரும்‌ அச்சுறுத்தலாக கண்டறியப்பட்டது. அப்போது எங்களுடைய கரீபிய நாடுகள்‌ தான்‌ அந்தப்‌ சுற்றுச்சூழல்‌ பிரச்சினையை எதிர்த்து போரிடுவதில்‌ முன்னணியில்‌ இருந்தோம்‌. அதேபோல்‌ இப்போது, மண்‌ வள அழிவை தடுக்கும்‌ முயற்சியிலும்‌ நாங்கள்‌ தொடக்கத்திலேயே இணைந்து உள்ளோம்‌” என்றார்‌.

டொமினிகா நாட்டின்‌ பிரதமர்‌ ரூஸ்வெல்ட்‌ கெர்ட்‌ பேசுகையில்‌, “இவ்வியக்கத்திற்கு எங்களுடைய முழுமையான ஆதரவை தெரிவித்து கொள்கிறோம்‌. விவசாயம்‌ சிறப்பாக நடந்தால்‌ தான்‌ மக்களுக்கு உணவு அளிக்க முடியும்‌. அதற்கு அடிப்படையாக இருக்கும்‌ மண்‌ வளத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமான ஒன்று” என்றார்‌.

செயின்ட்‌ லூசியா நாட்டன்‌ பிரதமர்‌ பிலிப்‌ ஜே பெர்ரி பேசுகையில்‌, “எங்கள்‌ நாட்டின்‌ விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டிய தருணத்தில்‌ நாங்கள்‌ இருக்கிறோம்‌. அதற்கு இந்த மண்‌ காப்போம்‌ இயக்கத்தின்‌ முன்னெடுப்பு மிகவும்‌ பொருத்தமாக இருக்கும்‌” என்றார்‌.

செயின்ட்‌ கிட்ஸ்‌ & நெவிஸ்‌ நாட்டின்‌ பிரதமர்‌ திமோதி ஹாரீஸ்‌ பேசுகையில்‌, “பூமியில்‌ வாழும்‌ அனைத்து உயிர்களும்‌ நலமாக வாழ மண்‌ வளம்‌ அவசியம்‌. அதை கவனத்தில்‌ கொண்டு தான்‌ இந்த முன்னெடுப்பு கரீபியன்‌ பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்‌.

இதுகுறித்து சத்குரு கூறுகையில்‌, “கடலில்‌ இருக்கும்‌ முத்துக்களை போல்‌ விளங்கும்‌ இந்த சிறிய நாடுகள்‌ மண்‌ வளத்தை மீட்டெடுக்க உறுதி எடுத்துள்ளன. பூமியில்‌ இருக்கும்‌ அனைத்து உயிர்களின்‌ நலனிற்காக ஒவ்வொரு நாடும்‌ மண வளத்தை காட்டாயம்‌ காக்க வேண்டும்‌; காக்க முடியும்‌ என்பதற்கு இந்நாடுகள்‌ சிறந்த எடுத்துக்காட்டாக உருவெடுத்துள்ளன” என்றார்‌.

மேலும்‌, “நம்‌ உயிர்‌ வளர்ச்சிக்கு காரணமானவற்றுடன்‌ நாம்‌ நமக்கான தொடர்பை இழந்து நிற்குறோம்‌. மண்‌ என்பது உயிரற்ற ஒரு பொருள்‌; அதை எப்படி வேண்டுமானால்‌ பயன்படுத்தி கொள்ளலாம்‌ என்பது தவறான அணுமுறை. மண்ணுக்கு உயிர்‌ உள்ளது. இளைஞர்களுக்கும்‌, எதிர்கால தலைமுறையினருக்கும்‌ நாம்‌ சொல்ல வேண்டிய முக்கியமான செய்தி - மண்ணுக்கும்‌ உயிர்‌ உள்ளது.” என்றார்‌.



புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்‌ கையெழுத்துடும்‌ நிகழ்ச்சியில்‌ மேற்கண்ட 4 நாடுகளின்‌ வேளாண்‌துறை, சுற்றுச்சூழல்‌ துறை மற்றும்‌ சுகாதார துறை அமைச்சர்களும்‌ பங்கேற்றனர்‌.



4 நாடுகளின்‌ தலைவர்களுக்கும்‌ கரீபியன்‌ நாடுகளின்‌ மண்‌ வளத்தை மீட்டெடுப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள்‌ அடங்கய புத்தகத்தை சத்குரு வழங்கினார்‌. இதில்‌ கூறப்பட்டுள்ள தீர்வுகள்‌ சர்வதேச விஞ்ஞானிகளின்‌ ஆலோசனைப்படி‌ அந்தந்த நாடுகளின்‌ தட்பவெப்ப சூழல்‌ மற்றும்‌ வேளாண்‌ முறைக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...