பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் நடமாடும் கரடிகள் இரவு வேளையில் உணவு தேடி குடியிருப்புக்கள் உலா வருவதாக பொதுமக்கள் புகார்.
நீலகிரி: ஊட்டி மஞ்சூர் அருகே டீ கடை கதவை உடைத்து கடையை சூறையாடிய கரடியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
பகல் நேரங்களில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் நடமாடும் கரடிகள் இரவு வேளையில் உணவு தேடி குடியிருப்புக்கள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், நேற்று குந்தா தாலுகா அலுவலகம் அருகே உள்ள மாணிக்கம் என்பவரது டீக்கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடி ஒன்று கடைக்குள் வைக்கப்பட்டிருந்த சமையல் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களை சூறையாடியது. மேலும், அடுப்பையும் உடைத்துத் தள்ளி விட்டு சென்றுள்ளது.
இந்நிலையில், வழக்கம்போல் டீ கடையை திறக்க சென்ற மாணிக்கம் கடையின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனைத்தொடர்ந்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து ரேஞ்சர் சீனிவாசன் மேற்பார்வையில் வனவர் ரவிக்குமார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதையடுத்து, அப்பகுதியில் கரடி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
பகல் நேரங்களில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் நடமாடும் கரடிகள் இரவு வேளையில் உணவு தேடி குடியிருப்புக்கள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், நேற்று குந்தா தாலுகா அலுவலகம் அருகே உள்ள மாணிக்கம் என்பவரது டீக்கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடி ஒன்று கடைக்குள் வைக்கப்பட்டிருந்த சமையல் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களை சூறையாடியது. மேலும், அடுப்பையும் உடைத்துத் தள்ளி விட்டு சென்றுள்ளது.
இந்நிலையில், வழக்கம்போல் டீ கடையை திறக்க சென்ற மாணிக்கம் கடையின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனைத்தொடர்ந்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து ரேஞ்சர் சீனிவாசன் மேற்பார்வையில் வனவர் ரவிக்குமார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதையடுத்து, அப்பகுதியில் கரடி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.