உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றி வரும் கோவை மாணவர் இந்தியா திரும்ப சம்மதம்

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தனது மகன் இந்தியாவிற்கு திரும்புவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதால் கோவை இளைஞரின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றி வரும் கோவை மாணவர் விரைவில் இந்தியா திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் சாய்நிகேஷ் உக்ரைனுக்கு விமானவியல் படிப்பதற்காக சென்றிருந்தார்.

இதனிடையே கடந்த மாதம் மார்ச் 24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள இந்தியர்களை மத்திய அரசு பாதுகாப்பாக மீட்டது.

ஒரு மாணவர் மட்டும் உயிரிழந்தார். அதே சமயம் கோவையை சேர்ந்த சாய்நிகேஷ் என்ற மாணவர் மட்டும் நாடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருப்பதாகவும், ரஷ்ய படையை எதிர்த்து போரிடுவேன் என்று கூறியுள்ளார்.

இதனை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மத்திய, மாநில அரசுக்கு நடந்த சம்பவத்தை பெற்றோர்கள் தெரிவித்தனர். உடனடியாக மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் பின்னர் மீண்டும் மாணவரிடம் தொடர்பு கொண்ட பெற்றோர்கள், போர் சமயத்தில் அங்கு இருப்பது நல்லது இல்லை, உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

ஒரு வழியாக நாடு திரும்ப மாணவர் சாய் நிகேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். இது பற்றி இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மாணவர் இந்தியா திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...