கடன் வசதி செய்து தருவதாகக் கூறி வங்கி விவரங்கள் மற்றும் ஓ.டி.பி கேட்டு ரூ.86 ஆயிரம் திருடிய மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் வங்கி வாடிக்கையாளரிடம் ஒ.டி.பி. (OTP) கேட்டு ரூ.86 ஆயிரம் திருடிய நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ். புரம் டிபி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (57). இவருக்கு சில நாட்களுக்கு முன் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் வங்கி கிரெடிட் கார்டு பிரிவில் எக்ஸிக்யூடிவ் ஆக பணியாற்றுவதாகவும் உங்களுக்கு தேவையான கடன் ஏற்பாடு செய்து தரப்படும் என கூறினார். இதைக்கேட்ட சதீஷ் வங்கியில் கடன் பெற சம்மதம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அந்த நபர் செல்போனில் பல்வேறு தகவல்களைக் கேட்டார். வங்கிக் கணக்கு எண் மற்றும் ஓடிபி எண்களை அனுப்புமாறு கூறினார். சதீஷ் விவரங்களையும் 2 முறை ஓ.டி.பி எண்களையும் அனுப்பியதும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 86,369 ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக சதீஷ் அளித்த புகாரின் பேரில் கோவை நகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ். புரம் டிபி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (57). இவருக்கு சில நாட்களுக்கு முன் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் வங்கி கிரெடிட் கார்டு பிரிவில் எக்ஸிக்யூடிவ் ஆக பணியாற்றுவதாகவும் உங்களுக்கு தேவையான கடன் ஏற்பாடு செய்து தரப்படும் என கூறினார். இதைக்கேட்ட சதீஷ் வங்கியில் கடன் பெற சம்மதம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அந்த நபர் செல்போனில் பல்வேறு தகவல்களைக் கேட்டார். வங்கிக் கணக்கு எண் மற்றும் ஓடிபி எண்களை அனுப்புமாறு கூறினார். சதீஷ் விவரங்களையும் 2 முறை ஓ.டி.பி எண்களையும் அனுப்பியதும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 86,369 ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக சதீஷ் அளித்த புகாரின் பேரில் கோவை நகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.