மார்ச் 27ம் தேதி முதல் புதுச்சேரியில் விமான சேவை மீண்டும் துவக்கம் - தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் பேட்டி

மத்திய அரசு இல்லாத மாநிலங்களில், சிறு சிறு விஷயங்கள் கூட பெரிதாக முன்னிறுத்தப்படுகிறது. என்னை பொருத்தவரை அனைத்து ஆளுநர்களும், மக்களுக்காக செயலாற்றுப்பவர்கள் என்பதுதான் எனது கருத்து, என்று தெரிவித்தார்.



கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர், தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.



அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா இல்லாத நாடாக இன்று இந்திய உள்ளது என்றால் அதற்கு காரணம் 180 கோடி தடுப்பூசி போட்டதால் தான். அவ்வளவு தடுப்பூசிகள் செலுத்த காரணம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு தான். இனி வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.



தெலுங்கானவில் ஆளுநர் உரையில்லாமல் சட்டமன்ற தொடங்கியிருக்கிறது. இருப்பினும், அதனை பெரிது படுத்தவில்லை. மக்களுக்காக அதை நான் விட்டுவிட்டேன். மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். அதனால் நான் அதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை எனவும் கூறினார்.

ஆளுநர்களும், முதலமைச்சர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எனது கருத்து எனக்கூறிய அவர், சில நேரங்களில் ஆளுநர்கள் சரியாக நடந்து கொள்வது கூட தவறாக முன்னிறுத்தப்படுவதாக, விமர்சித்தார். மத்திய அரசு இல்லாத மாநிலங்களில், சிறு சிறு விஷயங்கள் கூட பெரிதாக முன்னிறுத்தப்படுகிறது என்றும் என்னை பொருத்தவரை அனைத்து ஆளுநர்களும், மக்களுக்காக செயலாற்றுப்பவர்கள் என்பதுதான் எனது கருத்து என்று தெரிவித்தார்.



குடியரசு தலைவர் பதவிக்கு உங்களின் பெயர் பரீசிலிக்கப்படுவதாக சொல்லபடுகிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கும் எவ்வித கருத்தும் சொல்ல முடியாது எனவும் நான் ஒரு சாதாரண குடிமகள் தான், எனவும் தெரிவித்தார்.

மேலும், மார்ச் 27 ஆம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தின் விமான சேவை துவங்க இருக்கிறது என கூறிய அவர் பல்வேறு கட்ட முயற்சிக்கு பின் இந்த சேவை கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் அதற்கு நான் பிரதமருக்கும், விமான துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன் எனவும் கூறினார்.

புதுச்சேரி வளர்ச்சிக்கு விமான சேவை முக்கியம் என கூறிய அவர் புதுச்சேரி சுற்றுலாதுறை வளர்ச்சியடைவதற்கும், புதுச்சேரியொட்டியுள்ள கடலூர், நாகை, திருவாரூர் மக்களுக்கு இது உதவிகரமாக அமையும் எனவும் தெரிவித்தார். இந்த விமான சேவை

புதுச்சேரி - பெங்களூர் பெங்களூர் - ஹைதராபாத் நகருக்கும் இருக்கும் என்றும் நான் அதில் முதல் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன், என்று தெரிவித்தார்.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் இதற்கு நான் கருத்து கூற விரும்பவில்லை எனவும் கூறினார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...