கோவைபுதூர் பகுதியை சேர்ந்த சுகுணா (80) காலையில் தனது வீட்டு வாசலில் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த போது, ஹெல்மட் அணிந்து வந்த இருவர் அவரது 7 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பித்தனர்.
கோவை: கோவைப்புதூர் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த மூதாட்டியிடம் ஹெல்மட் அணிந்து வந்த மர்ம நபர்கள் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுகுணா (80). இவர் இன்று காலை வழக்கம்போல் தனது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, ஹல்மட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், சுகுணாவின் அருகே முகவரி கேட்பது போல் அருகே சென்றுள்ளனர். சுகுணா திரும்பி முகவரி சொல்ல முயன்ற போது திடீரென இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில்தப்பிச் சென்றனர்.
மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், ஹெல்மட் அணிந்த திருடர்களை பிடிக்க முயன்ற போது, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர். இச்சம்பவம், தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுகுணா (80). இவர் இன்று காலை வழக்கம்போல் தனது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, ஹல்மட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், சுகுணாவின் அருகே முகவரி கேட்பது போல் அருகே சென்றுள்ளனர். சுகுணா திரும்பி முகவரி சொல்ல முயன்ற போது திடீரென இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில்தப்பிச் சென்றனர்.
மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், ஹெல்மட் அணிந்த திருடர்களை பிடிக்க முயன்ற போது, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர். இச்சம்பவம், தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.