முதலிடம் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கருக்கும், மூன்றாம் இடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவை: சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயலாக்கத்திற்கான விருதில் கோவை மாவட்ட ஆட்சியருக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது.
2021-22ம் ஆண்டு சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு (முதல் மூன்று இடம்) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.
அதன்படி, 2021ம் ஆண்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயலாக்க விருது மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதன்படி, இரண்டாவது இடமாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலிடம் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கருக்கும் மூன்றாம் இடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்வில் சென்னை தலைமைச் செயலாளர் உட்பட பல்வேறு அமைச்சர்கள் உடனிருந்தனர்.
2021-22ம் ஆண்டு சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு (முதல் மூன்று இடம்) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.
அதன்படி, 2021ம் ஆண்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயலாக்க விருது மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதன்படி, இரண்டாவது இடமாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலிடம் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கருக்கும் மூன்றாம் இடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்வில் சென்னை தலைமைச் செயலாளர் உட்பட பல்வேறு அமைச்சர்கள் உடனிருந்தனர்.