கோவையில் வரும் மார்ச் 28, 29 தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம்..!

அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேலை நிறுத்தத்தை தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார்.


கோவை: அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மார்ச்‌ 28, 29 ஆகிய தேதிகளில்‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி கோவை, திருப்பூர்‌, நீலகிரி, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களின்‌ அனைத்துத் தொழிற்சங்கங்களின்‌ மண்டல மாநாடு நாளை (13.03.2022)ம்‌ நாள்‌ ஞாயிறு காலை 11 மணிக்கு காட்டூர்‌ AITUC அலுவலகத்தில்‌ நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில்‌ மாநில தொழிற்சங்கத்‌ தலைவர்கள்‌ கோரிக்கைகளை விளக்கியும்‌, வேலை நிறுத்தம் தொடர்பான இயக்கங்கள்‌, போராட்டங்கள்‌ குறித்தும்‌ முடிவுகள்‌ மேற்கொள்ளவுள்ளனர்‌.

மத்திய அரசின்‌ தொழிலாளர்‌ விரோத, சட்டத்‌ தொகுப்புகள்‌ 4ம்‌ திரும்பப்‌பெற வலியுறுத்தியும்‌, மின்சாரத்‌ திருத்தச்‌ சட்டத்தை இரத்து செய்யக்‌ கோரியும்‌, விவசாயிகளின்‌ கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்‌, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கும்‌ கொள்கைகளுக்கு எதிராகவும்‌ உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறவுள்ள இம்மண்டல மாநாட்டில்‌ போராட்ட அறிவிப்புகள்‌ குறித்த முடிவுகளும்‌ மேற்கொள்ளவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...