கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தமிழக, கேரள எல்லை சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன், கேரள மாநிலம், கோழிக்கோடு, முத்துக்காடு, திருவண்ணமூலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 2 பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தமிழக, கேரள எல்லை சோதனை சாவடிகளில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வாகனங்கள், தீவிர சோதனைக்குப் பிறகே, அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால், தகவல் தெரிவிக்குமாறு, பழங்குடியின கிராம மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மாவோயிஸ்ட் தடுப்பு அதிரடிப்படையினரும், மலைக்கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன், கேரள மாநிலம், கோழிக்கோடு, முத்துக்காடு, திருவண்ணமூலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 2 பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தமிழக, கேரள எல்லை சோதனை சாவடிகளில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வாகனங்கள், தீவிர சோதனைக்குப் பிறகே, அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால், தகவல் தெரிவிக்குமாறு, பழங்குடியின கிராம மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மாவோயிஸ்ட் தடுப்பு அதிரடிப்படையினரும், மலைக்கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.