ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள வாகன நிறுத்த இடத்தில், கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி இருப்பதால் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகனம் நிறுத்துமிடத்தில் புதர்களை நீக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அடிக்கடி பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலையில் கூட, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனம் நிறுத்த சென்ற ஒருவர் பெரிய பாம்பு ஊர்ந்து செல்வதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. பின்னர், பாம்பு பிடிப்பவர் ஒருவரை அழைத்து பாம்பினை தேடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பராமரிப்பின்றி ஆங்காங்கே புதர் மண்டி கிடக்கும் இடங்கள் இருப்பதால் தான் பாம்புகள், தேள் போன்ற விஷ உயிரினங்கள் அச்சுறுத்தி வருவதாக, அங்குள்ள ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்து வந்த நிலையில், இன்று மீண்டும் பாம்பு ஒன்று அப்பகுதியில் தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறிப்பாக, வாகனங்களை நிறுத்த, ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள இடத்தில், கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, இப்பகுதியில் பாம்புகள் நடமாடுவதால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர், புதர்களை அகற்றவும், பாம்புகளை பிடித்து வனப்பகுதிக்குள் பத்திரமாக விடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அடிக்கடி பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலையில் கூட, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனம் நிறுத்த சென்ற ஒருவர் பெரிய பாம்பு ஊர்ந்து செல்வதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. பின்னர், பாம்பு பிடிப்பவர் ஒருவரை அழைத்து பாம்பினை தேடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பராமரிப்பின்றி ஆங்காங்கே புதர் மண்டி கிடக்கும் இடங்கள் இருப்பதால் தான் பாம்புகள், தேள் போன்ற விஷ உயிரினங்கள் அச்சுறுத்தி வருவதாக, அங்குள்ள ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்து வந்த நிலையில், இன்று மீண்டும் பாம்பு ஒன்று அப்பகுதியில் தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறிப்பாக, வாகனங்களை நிறுத்த, ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள இடத்தில், கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, இப்பகுதியில் பாம்புகள் நடமாடுவதால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர், புதர்களை அகற்றவும், பாம்புகளை பிடித்து வனப்பகுதிக்குள் பத்திரமாக விடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.