கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனம் நிறுத்துமிடத்தில் புதர்களை நீக்க பொதுமக்கள் வலியுறுத்தல்..!

ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள வாகன நிறுத்த இடத்தில், கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி இருப்பதால் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகனம் நிறுத்துமிடத்தில் புதர்களை நீக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அடிக்கடி பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலையில் கூட, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனம் நிறுத்த சென்ற ஒருவர் பெரிய பாம்பு ஊர்ந்து செல்வதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. பின்னர், பாம்பு பிடிப்பவர் ஒருவரை அழைத்து பாம்பினை தேடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பராமரிப்பின்றி ஆங்காங்கே புதர் மண்டி கிடக்கும் இடங்கள் இருப்பதால் தான் பாம்புகள், தேள் போன்ற விஷ உயிரினங்கள் அச்சுறுத்தி வருவதாக, அங்குள்ள ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்து வந்த நிலையில், இன்று மீண்டும் பாம்பு ஒன்று அப்பகுதியில் தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பாக, வாகனங்களை நிறுத்த, ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள இடத்தில், கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, இப்பகுதியில் பாம்புகள் நடமாடுவதால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர், புதர்களை அகற்றவும், பாம்புகளை பிடித்து வனப்பகுதிக்குள் பத்திரமாக விடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...