கோவை துடியலூர் அருகே உணவகத்தில் பார்சல் வாங்குவது போல நடித்து 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு..!

தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற போது அங்கிருந்தவர்கள் அவரை மடக்கிப் பிடித்து துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை துடியலூர் அருகே உணவகத்தில் பார்சல் வாங்குவது போல நடித்து 10 பவுன் சங்கிலியை பறித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

கோவை துடியலூர் கவுன்டர்மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி இவர் வீட்டில் சிறிய அளவிலான உணவகம் வைத்து நடத்தி வருகிறார். அவருடன் அவரது மனைவி லீலாவதி மற்றும் அவரது தாயாரும் உணவகத்தை கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு சமையல் வேலைகளை முடித்துவிட்டு, உணவகத்தின் வாசல் அருகே லீலாவதி அமர்ந்து இருந்ததாக தெரிகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வண்டியை ஆன் செய்தவாறே நிறுத்தி விட்டு, உணவு வாங்குவது போல் அருகே வந்துள்ளார்.

அப்போது திடீரென லீலாவதி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தாலிச் செயின் மற்றும் 3 சவரன் தங்கச் செயின் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றவரை மடக்கிப் பிடித்து துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி (36) என்பதும், அவர் கோவை துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...