சேரன் மாநகரில் பத்தாண்டுகளுக்கு மேல் தொடரும் சாக்கடை கால்வாய் பிரச்சனை: மாணவரணி துணை அமைப்பாளருடன் கவுன்சிலர் ஆய்வு

திமுக மாணவரணி துணை அமைப்பாளர் மற்றும் கோவை மாநகராட்சி 22-வது வார்டு மாமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் மாநகராட்சி அதிகாரிகளுடன் குடியிருப்பு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: சேரன் மாநகரில் பத்தாண்டுகளுக்கு மேல் தொடரும் சாக்கடை கால்வாய் பிரச்சனைகளை மாணவரணி துணை அமைப்பாளருடன் கவுன்சிலர் ஆய்வு செய்தார்.

விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது சேரன்மாநகர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு பகுதி. ஏ,பி,சி என மூன்று பிரிவுகளில் 568 வீடுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன.



சாக்கடை கால்வாய் கட்டமைப்பு வசதி கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் சரி செய்யப்படாத காரணத்தால் கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளன.



இப்பிரச்சனை குறித்து திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் கோவை மாநகராட்சி 22-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாபு உள்ளிட்டோர் மாநகராட்சி அதிகாரிகளுடன் இன்று சேரன்மாநகர் குடியிருப்பு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பிரபாகரன் கூறியதாவது:-

சேரன் மாநகரில் மொத்தம் 568 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டமைப்பு சீரான முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிக்கப்படாத காரணத்தால் குடியிருப்புப் பகுதி வளாகம் முழுவதும் கழிவுநீர் சாக்கடையில் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்கு முன் குளம்போல் தேங்கி நிற்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.



கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை விடுத்த போதும் இன்றுவரை சேரன்மாநகர் பகுதியில் சாக்கடை கால்வாய் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை.

25-ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக தற்பொழுது திமுக இப்பகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இன்று காலை சேரன்மாநகர் 4-வது பஸ் ஸ்டாப் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கழிவுநீர் சாக்கடை கால்வாயின் அவல நிலை குறித்து நான் மற்றும் கவுன்சிலர் பாபு இருவரும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டோம். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்". இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாநகராட்சி 22-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாபு கூறியதாவது:-



எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மோசமான ரோடு, சாக்கடை கால்வாய் மற்றும் குடிநீர் பிரச்சினை அதிகம் காணப்படுகிறது. திமுக அரசு மீது மிகுந்த நம்பிக்கை வைத்து மாபெரும் வெற்றியை இப்பகுதி மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

அவர்கள் நம்பிக்கை என்றும் வீண் போகாது. மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.



சேரன் மாநகரில் இன்று சாக்கடை கால்வாய் பிரச்சனை குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...