தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கூடலூர் இளைஞர் கோவையில் கைது - 18.5 சவரன் தங்கம் பறிமுதல்!

விசாரணையில் கூடலூர் இளைஞர் மீது தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.


கோவை: தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கூடலூர் இளைஞரை போலீசார் கோவையில் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் இறைச்சிக் கடை நடத்திவருபவர் சுரேஷ். இவர் சிங்காநல்லூர் நந்தனம் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கம் போல், சுரேஷ் தனது இறைச்சிக்கடைக்குச் சென்றுவிட்டார்.

வீட்டில் அனைவரும் வெளியே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற நிலையில், பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து சுரேசின் வீட்டிலிருந்து 37-சவரன் தங்க நகை மற்றும் 3- லட்சம் பணத்தை மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சுரேஷ் புகாரளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பட்ட பகலில் ஒரு மர்ம நபர் சுரேஷின் வீட்டில் கொள்ளையடித்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த போலிசாருக்கு கோவை இருகூர் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர் சுற்றுவதாக போலிசாருக்கு வந்த தகவலை அடுத்து போலிசார் அந்த மர்ம நபரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

மேலும் விசாரணையில் பிடிபட்ட நபர் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த சுந்தர் என்ற புறா சுந்தர் என்பது தெரியவந்தது. மேலும் இவனிடம் இருந்து சுரேஷின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 37-சவரன் தங்க நகையில், 18.5-சவரன் தங்க நகையைத் தங்கக் கட்டியாகப் பறிமுதல் செய்தனர்.

மேலும் சுந்தரிடம் நடத்திய விசாரணையில், இவன் மீது தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியிருந்தது.

இதனை அடுத்து கோவை சிங்காநல்லூர் போலிசார் சுந்தர் மீது கொள்ளை வழக்குப் பதிவு செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் சுந்தர் நடத்திய கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...