பொருட்களைப் பறிமுதல் செய்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் புகையிலைப் பொருட்களை கேரள மாநிலத்திற்கு கடத்த முற்பட்டது தெரியவந்துள்ளது.
கோவை: கோவை பொள்ளாச்சி அருகே பாலக்காடு சாலையில் சரக்கு ஆட்டோவில் 3 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் சரக்கு வாகனங்களில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திற்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அவரது உத்தரவின்பேரில் எஸ்பியின் தனிப்படை போலீசார் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியதில் வாகனத்தை ஓட்டி வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து, சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனையிட்டபோது உள்ளே மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

பின்னர் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த ஜவகர் என்கின்ற சபரிகிரீசன் என்பவரை கைது செய்து மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்ட போது புகையிலைப் பொருட்களை கேரள மாநிலத்திற்குக் கடத்த முற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் சரக்கு வாகனங்களில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திற்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அவரது உத்தரவின்பேரில் எஸ்பியின் தனிப்படை போலீசார் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியதில் வாகனத்தை ஓட்டி வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து, சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனையிட்டபோது உள்ளே மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
பின்னர் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த ஜவகர் என்கின்ற சபரிகிரீசன் என்பவரை கைது செய்து மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்ட போது புகையிலைப் பொருட்களை கேரள மாநிலத்திற்குக் கடத்த முற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.