பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோவில் 3 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது..!

பொருட்களைப் பறிமுதல் செய்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் புகையிலைப் பொருட்களை கேரள மாநிலத்திற்கு கடத்த முற்பட்டது தெரியவந்துள்ளது.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே பாலக்காடு சாலையில் சரக்கு ஆட்டோவில் 3 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் சரக்கு வாகனங்களில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திற்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அவரது உத்தரவின்பேரில் எஸ்பியின் தனிப்படை போலீசார் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியதில் வாகனத்தை ஓட்டி வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.



இதையடுத்து, சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனையிட்டபோது உள்ளே மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.



பின்னர் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த ஜவகர் என்கின்ற சபரிகிரீசன் என்பவரை கைது செய்து மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்ட போது புகையிலைப் பொருட்களை கேரள மாநிலத்திற்குக் கடத்த முற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...