இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கிணத்துக்கடவு போலீசார் அடையாளம் தெரியாத வாகனத்தைத் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சலவைத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (85) சலவைத் தொழிலாளர் இவர், மனைவி, மகன் மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து கோவில்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்துள்ளார்.
பின்னர், மது அருந்திவிட்டு பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ராமசாமி மீது மோதியதில், பலத்த காயம் ஏற்பட்ட ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (85) சலவைத் தொழிலாளர் இவர், மனைவி, மகன் மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து கோவில்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்துள்ளார்.
பின்னர், மது அருந்திவிட்டு பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ராமசாமி மீது மோதியதில், பலத்த காயம் ஏற்பட்ட ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.