கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு புதிய சுகாதார அலுவலராக பரமசிவம் நியமனம்..!

சீனியாரிட்டி அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் பரமசிவத்துக்கு, பதவி உயர்வு வழங்கி மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு புதிய சுகாதார அலுவலராக பரமசிவம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்கள் உள்ளன. அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட, 20 வார்டுகளை கவனிக்கும் வகையில், மண்டல சுகாதார அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

மேற்கு மண்டலத்தில் பணிபுரிந்த சுகாதார அலுவலர் சண்முகநாதன், பிப்ரவரி 28ல் பணி ஓய்வு பெற்றார். அவரது பதவிக்கு வர, சுகாதார ஆய்வாளர்கள் பலரும் பல வழிகளில் முயன்றனர். ஆளுங்கட்சியினர் மூலமாக அழுத்தம் கொடுத்துப் பார்த்தனர்.

இந்நிலையில், எதற்கும் அசைந்து கொடுக்காத மாநகராட்சி ஆணையர் ராஜகோபால், சீனியாரிட்டி அடிப்படையில் காத்திருந்த சுகாதார ஆய்வாளர் பரமசிவத்துக்கு, பதவி உயர்வு வழங்கி மேற்கு மண்டல சுகாதார அலுவலர் பொறுப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், குப்பை அள்ளும் பணி சுணக்கமாக இருந்தது. மதியம், 12.00 மணிக்குச் சென்றாலும் வார்டுகளில் பல்வேறு பகுதிகளில் குப்பை தேக்கம் காணப்பட்டது.

அதனால், சுகாதார அலுவலர் ராமச்சந்திரனை, அப்பொறுப்பில் இருந்து விடுவித்து விட்டு, சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...