சீனியாரிட்டி அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் பரமசிவத்துக்கு, பதவி உயர்வு வழங்கி மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு புதிய சுகாதார அலுவலராக பரமசிவம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்கள் உள்ளன. அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட, 20 வார்டுகளை கவனிக்கும் வகையில், மண்டல சுகாதார அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
மேற்கு மண்டலத்தில் பணிபுரிந்த சுகாதார அலுவலர் சண்முகநாதன், பிப்ரவரி 28ல் பணி ஓய்வு பெற்றார். அவரது பதவிக்கு வர, சுகாதார ஆய்வாளர்கள் பலரும் பல வழிகளில் முயன்றனர். ஆளுங்கட்சியினர் மூலமாக அழுத்தம் கொடுத்துப் பார்த்தனர்.
இந்நிலையில், எதற்கும் அசைந்து கொடுக்காத மாநகராட்சி ஆணையர் ராஜகோபால், சீனியாரிட்டி அடிப்படையில் காத்திருந்த சுகாதார ஆய்வாளர் பரமசிவத்துக்கு, பதவி உயர்வு வழங்கி மேற்கு மண்டல சுகாதார அலுவலர் பொறுப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், குப்பை அள்ளும் பணி சுணக்கமாக இருந்தது. மதியம், 12.00 மணிக்குச் சென்றாலும் வார்டுகளில் பல்வேறு பகுதிகளில் குப்பை தேக்கம் காணப்பட்டது.
அதனால், சுகாதார அலுவலர் ராமச்சந்திரனை, அப்பொறுப்பில் இருந்து விடுவித்து விட்டு, சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.
கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்கள் உள்ளன. அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட, 20 வார்டுகளை கவனிக்கும் வகையில், மண்டல சுகாதார அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
மேற்கு மண்டலத்தில் பணிபுரிந்த சுகாதார அலுவலர் சண்முகநாதன், பிப்ரவரி 28ல் பணி ஓய்வு பெற்றார். அவரது பதவிக்கு வர, சுகாதார ஆய்வாளர்கள் பலரும் பல வழிகளில் முயன்றனர். ஆளுங்கட்சியினர் மூலமாக அழுத்தம் கொடுத்துப் பார்த்தனர்.
இந்நிலையில், எதற்கும் அசைந்து கொடுக்காத மாநகராட்சி ஆணையர் ராஜகோபால், சீனியாரிட்டி அடிப்படையில் காத்திருந்த சுகாதார ஆய்வாளர் பரமசிவத்துக்கு, பதவி உயர்வு வழங்கி மேற்கு மண்டல சுகாதார அலுவலர் பொறுப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், குப்பை அள்ளும் பணி சுணக்கமாக இருந்தது. மதியம், 12.00 மணிக்குச் சென்றாலும் வார்டுகளில் பல்வேறு பகுதிகளில் குப்பை தேக்கம் காணப்பட்டது.
அதனால், சுகாதார அலுவலர் ராமச்சந்திரனை, அப்பொறுப்பில் இருந்து விடுவித்து விட்டு, சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.