கோவை தனியார் நிறுவன உரிமையாளர் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவையில் தனியார் நிறுவன உரிமையாளரை கொலை செய்த வழக்கில், அவரது நண்பர் மற்றும் உடந்தையாக இருந்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட குற்றவியல் முதன்மை கூடுதல் நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகராஜன் உத்தரவிட்டார்.



கோவை: கோவையில் தனியார் நிறுவன உரிமையாளரை கொலை செய்த வழக்கில், அவரது நண்பர் மற்றும் உடந்தையாக இருந்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட குற்றவியல் முதன்மை கூடுதல் நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகராஜன் உத்தரவிட்டார்.

கோவை இருகூரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (45). இவரும் சூலூரை சேர்ந்த சதீஷ்குமாரும் (29) ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். பின்னர், முருகானந்தம் இருகூரில் தனியே நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிலையில், சதிஷ் குமார், 2019-ல் ரூ.4 லட்சம் அளித்து, பங்குதாரராக இணைத்துக் கொள்ள கேட்டுள்ளார். அதற்கு, முருகானந்தம், முதலில், அந்த நிறுவனத்தில் ஆப்ரேட்டராக பணியாற்றும் படியும், பின்னர் பங்குதாரராக இணைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, சதீஷ்குமார் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

ஆனால், ஏற்கெனவே அளித்த தொகை குறித்தும், சம்பளம் வழங்காமல் முருகானந்தம் தட்டிக்கழித்து வந்துள்ளார். இதனால், முருகானந்தத்தை கொலை செய்ய திட்டமிட்ட சதீஷ்குமார், அதே நிறுவனத்தில் பணியாற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் உதவியை கோரியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2019 நவம்பர் 19-ம் தேதி சதீஷ்குமார், முருகானந்தம் ஆகிய இருவரும் மது அருந்திய பின்னர், முருகானந்தத்தை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற சதிஷ்குமார், முருகானந்த்தை தலையைணையை கொண்டு அழுத்தியும், படுக்கை விரிப்பில் கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். கொலைக்கு உடைந்தையாக சந்திரன் இருந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் சதீஷ்குமார், சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், சதீஷ்குமார், சந்திரன் ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...