கோவையில் சூர்யா படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு திரையரங்குக்கு 4 போலீசார் விதம் மாநகர் மற்றும் புறநகரில் படம் திரையிடப்பட்ட 23 திரையரங்குகள் முன்பு மொத்தம் 92 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் இன்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது. ஜெய் பீம் படம் சர்ச்சையைத் தொடர்ந்து சூர்யா படத்தை திரையரங்குகளில் வெளியிட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடலூரில் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என மிரட்டல் கடிதம் வந்தது. இதையடுத்து படம் இன்று வெளியானதால் சென்னையில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கும் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல் சூர்யா படம் வெளியாகும் திரையரங்குகளின் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 23 தியேட்டர்களில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி உள்ளது.

மாநகரில் 12 திரையரங்குகளில் புறநகரில் 11 இடங்களிலும் படம் திரையிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு திரையரங்குக்கு 4 போலீசார் விதம் மாநகர் மற்றும் புறநகரில் படம் திரையிடப்பட்ட 23 திரையரங்குகள் முன்பு மொத்தம் 92 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...