கோவையில் சூர்யா படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு திரையரங்குக்கு 4 போலீசார் விதம் மாநகர் மற்றும் புறநகரில் படம் திரையிடப்பட்ட 23 திரையரங்குகள் முன்பு மொத்தம் 92 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் இன்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது. ஜெய் பீம் படம் சர்ச்சையைத் தொடர்ந்து சூர்யா படத்தை திரையரங்குகளில் வெளியிட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடலூரில் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என மிரட்டல் கடிதம் வந்தது. இதையடுத்து படம் இன்று வெளியானதால் சென்னையில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கும் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல் சூர்யா படம் வெளியாகும் திரையரங்குகளின் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 23 தியேட்டர்களில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி உள்ளது.

மாநகரில் 12 திரையரங்குகளில் புறநகரில் 11 இடங்களிலும் படம் திரையிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு திரையரங்குக்கு 4 போலீசார் விதம் மாநகர் மற்றும் புறநகரில் படம் திரையிடப்பட்ட 23 திரையரங்குகள் முன்பு மொத்தம் 92 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...