ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் “மூவி ஆன் வாட்டர்” என்னும் திட்டத்தினை கோவை மாநகராட்சி துவக்க உள்ளது.
கோவை: கோவையில் ரூ.3 கோடி செலவில் உக்கடம் குளத்தின் அருகில் பொதுமக்களை ஈர்க்கும் வண்ணம் தண்ணீரில் படம் காட்டும் புதிய திட்டத்தை கோவை மாநகராட்சி ஏற்படுத்த உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் “மூவி ஆன் வாட்டர்” என்னும் திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் பகுதியில் ரூ.3 கோடிக்கு கோவை மாநகராட்சியின் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஒன்பது குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது நிதி ஒதுக்கப்பட்டு 7 குளங்களில் வேலை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
காங்கிரீட் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பல்லுயிர் பெருக்க சூழல் பாதிக்கப்பட்டு வருகின்றது. இத்தகைய சூழலானது இயற்கை ஆய்வாளர்களிடத்தில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
மேலும், இத்திட்டத்தினை வடிவமைத்துக் கொடுத்த ஒயாஸிஸ் நிறுவனத்தினை டெல்லியிலிருந்து வரவழைத்து ஆலோசனை நடைபெற்றது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் “மூவி ஆன் வாட்டர்” என்னும் திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் பகுதியில் ரூ.3 கோடிக்கு கோவை மாநகராட்சியின் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஒன்பது குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது நிதி ஒதுக்கப்பட்டு 7 குளங்களில் வேலை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
காங்கிரீட் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பல்லுயிர் பெருக்க சூழல் பாதிக்கப்பட்டு வருகின்றது. இத்தகைய சூழலானது இயற்கை ஆய்வாளர்களிடத்தில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
மேலும், இத்திட்டத்தினை வடிவமைத்துக் கொடுத்த ஒயாஸிஸ் நிறுவனத்தினை டெல்லியிலிருந்து வரவழைத்து ஆலோசனை நடைபெற்றது.