கணவன், மாமியார் தலைமறைவான நிலையில், வருவாய் கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், வருவாய் கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை தொண்டாமுத்தூர் காளியண்ணன்புதூரை சேர்ந்தவர் பார்த்திபன் (33). இவர் டைலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாலதி (20). இருவருக்கும் கடந்த ஆறு மாதத்திற்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை மாலதி வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருப்பதாக தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவன் பார்த்திபன், மாமியார் முருகாத்தாள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், வருவாய் கோட்டாட்சியர் இளங்கோவன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கோவை தொண்டாமுத்தூர் காளியண்ணன்புதூரை சேர்ந்தவர் பார்த்திபன் (33). இவர் டைலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாலதி (20). இருவருக்கும் கடந்த ஆறு மாதத்திற்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை மாலதி வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருப்பதாக தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவன் பார்த்திபன், மாமியார் முருகாத்தாள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், வருவாய் கோட்டாட்சியர் இளங்கோவன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.