நகராட்சி அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருப்பூர் காங்கேயம் சாலையில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா நகர் சாந்தி பட்டறை என்ற பகுதியில் பொதுக்கழிவு நீர் குழாய் செல்லும் பகுதியைச் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் தங்கள் வீடுகளிலிருந்து கழிவுநீர் வெளியேற இயலாமல் இருப்பதாகவும், இது தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி நல்லூர் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஆனால் நகராட்சி அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.