உத்திரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதை இனிப்புகள் வழங்கி பாஜகவினர் கொண்டாடினர்.
கோவை: கோவையில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் வெற்றியைக் கொண்டாடினர்.
இன்று பஞ்சாப், உத்திரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர்த்து 4 மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகப்படியான இடங்களை வென்றுள்ளது.
இதனைக் கொண்டாடும் விதமாக, கோவை பாஜக சார்பில் சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகம் முன் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
பாஜக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் ஏ.பி. முருகானந்தம் தலைமையில் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுமக்களிடம் பாஜக வெற்றியை தெரிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு வெற்றியைக் கொண்டாடினர்.