அறியாமையா..? அக்கறையின்மையா..? விளம்பர எண்ணமா..? - எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு எம்.பி. நடராஜன் கேள்வி..!

பிரச்சினை குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அரைகுறை தகவல்களோடு, வானதி சீனிவாசன் மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தது குறித்து கேள்வி.


கோவை: அறியாமையா..? அக்கறையின்மையா..? விளம்பர எண்ணமா..? - எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு எம்.பி. நடராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து எம்.பி. நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்து இருப்பதாக பத்திரிக்கை செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில் ரயில்வே அமைச்சரிடம் கொடுத்துள்ள மனுவின் சாரம்சங்களைத் தெரிவித்து இருந்தார்.

அதில் கோயமுத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் அல்லது பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோவையை பிரித்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோயமுத்தூர் தனியாக பிரிக்கப்பட்டு சேலம் கோட்டத்தில் கடந்த 2006ம் ஆண்டே இணைக்கப்பட்டு விட்டது.

இதற்காக பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாகவே, அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த லாலுபிரசாத் யாதவ் சேலம் கோட்டத்தை உருவாக்கினார்.

பொள்ளாச்சி, கிணத்துகடவு போன்ற ஊர்கள் மட்டுமே இன்னமும் பாலக்காடு ரயில்வே கோட்டத்துடன் இருக்கின்றது. இவற்றையும் சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என 2007 முதல் அனைத்து கட்சிகளும் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து போராடி வருகிறோம்.

உண்மை நிலவரம் இப்படி இருக்க பாலக்காடு ரயில்வே கோட்டத்திலிருந்து கோவையைப் பிரிக்க வேண்டும் என பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து மனு அளித்து வந்து இருப்பது அவரது அறியாமையைக் காட்டுகின்றது.

சேலம் ரயில்வே கோட்டம் அமைந்த பின்னும் 45 சதவீத வருவாயினை கொடுக்கும் கோயமுத்தூர் ரயில் நிலையத்திற்கு உரிய கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வில்லை என்பதால் கோவையை தனி ரயில்வே கோட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுத்துள்ளது.

ஆனால் பிரச்சினை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளாமலும், இது குறுத்து அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்காமலும் அரைகுறை தகவல்களோடு, மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்து வந்து இருப்பது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அமையாது. கோவை மாவட்டத்திற்கும் எந்த வகையிலும் பயனளிக்காது.

பா.ஜ.கவில் தேசிய பொறுப்பு, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் போன்ற பொறுப்புகளுடன் இருப்பவர் மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் போது கூடுதல் பொறுப்புடன் இருப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...