தென்னிந்தியாவில் முதல் முறையாக உற்பத்தி சார் வாழ்க்கை சுழற்சி மேலாண்மை தொழில் நுட்ப ஆய்வகம் துவக்கம்.
கோவை: பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பி.எல்.எம். மற்றும் எம்.பி.எஸ்.இ. தொழில் நுட்ப ஆய்வக துவக்க விழா நடைபெற்றது.
பொள்ளாச்சியில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பி.எல்.எம். என்ஜினியரிங் இந்தியா நிறுவனமும் இணைந்து தென்னிந்தியாவில் முதல் முறையாக உற்பத்தி சார் வாழ்க்கை சுழற்சி மேலாண்மை தொழில் நுட்ப ஆய்வகம் மற்றும் மாதிரி அடிப்படையிலான அமைப்புகள் சார்ந்த பொறியியல் தொழில்நுட்ப ஆய்வகம் தொடங்குவதற்கு டாக்டர் மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியைத் தேர்வு செய்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வருடமும் கல்லூரியில் இயந்திரவியல் மற்றும் வாகனவியல் துறையில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி.எல்.எம்(PLM) மற்றும் எம்.பி.எஸ்.இ(MBSE) துறையின் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப் பட்டு வருகின்றன.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் டாக்டர் எம்.மாணிக்கம் கேப்மினி இயக்குனர் ரங்கராஜ் சிவகுமார், என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் சி.ராமசாமி மற்றும் எம்.சி.இ.டி.கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் தலைவர் மாணிக்கம் திறந்து வைத்தார்.
பின்னர் இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக 2022ம் ஆண்டு பிரிவில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் ப்ரொபஷனல் மற்றும் மெக்கட்ரானிக்ஸ் துறையில் பயிலும் 33 மாணவர்கள் வருடத்திற்கு 4 லட்சம் ஊதிய அடிப்படையில் பி.எல்.எம் (PLM) துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

எம்.பி எஸ்.இ (MBSE) துறையில் மாணவர்கள் வேலை வாய்ப்புப் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றும் கேப்மினி நிறுவனம் உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 50 நாடுகளுடன் கூட்டமைத்து, அதிக அளவிலான தொழில் நுட்ப விற்பனையாளர்களை கொண்டுள்ளது என்றும், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப விரைவாக செயல்படுவதற்கான வளங்களையும், நிபுணத்துவம் மிக்க வல்லுனர்களையும், கேப் மினி நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது என கூறினார்.
பொள்ளாச்சியில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பி.எல்.எம். என்ஜினியரிங் இந்தியா நிறுவனமும் இணைந்து தென்னிந்தியாவில் முதல் முறையாக உற்பத்தி சார் வாழ்க்கை சுழற்சி மேலாண்மை தொழில் நுட்ப ஆய்வகம் மற்றும் மாதிரி அடிப்படையிலான அமைப்புகள் சார்ந்த பொறியியல் தொழில்நுட்ப ஆய்வகம் தொடங்குவதற்கு டாக்டர் மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியைத் தேர்வு செய்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வருடமும் கல்லூரியில் இயந்திரவியல் மற்றும் வாகனவியல் துறையில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி.எல்.எம்(PLM) மற்றும் எம்.பி.எஸ்.இ(MBSE) துறையின் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப் பட்டு வருகின்றன.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் டாக்டர் எம்.மாணிக்கம் கேப்மினி இயக்குனர் ரங்கராஜ் சிவகுமார், என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் சி.ராமசாமி மற்றும் எம்.சி.இ.டி.கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் தலைவர் மாணிக்கம் திறந்து வைத்தார்.
பின்னர் இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக 2022ம் ஆண்டு பிரிவில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் ப்ரொபஷனல் மற்றும் மெக்கட்ரானிக்ஸ் துறையில் பயிலும் 33 மாணவர்கள் வருடத்திற்கு 4 லட்சம் ஊதிய அடிப்படையில் பி.எல்.எம் (PLM) துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
எம்.பி எஸ்.இ (MBSE) துறையில் மாணவர்கள் வேலை வாய்ப்புப் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றும் கேப்மினி நிறுவனம் உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 50 நாடுகளுடன் கூட்டமைத்து, அதிக அளவிலான தொழில் நுட்ப விற்பனையாளர்களை கொண்டுள்ளது என்றும், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப விரைவாக செயல்படுவதற்கான வளங்களையும், நிபுணத்துவம் மிக்க வல்லுனர்களையும், கேப் மினி நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது என கூறினார்.