17 வயது சிறுவன் ராமசெட்டிபாளையம் பள்ளி வீதியில் பணியில் இருந்த போது, இரும்பு கம்பியை தூக்கியதாக தெரிகிறது. அப்போது, மேலே சென்ற மின்கம்பிகள் மீது இரும்பு பட்டதும், அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
கோவை: கோவையில் பணியின் போது மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் பலியான சம்பவம் குறித்து, பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில், 17 வயதான அவரது மூத்த மகன், கடந்த ஆறு மாதமாக கோவை புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று அவர் ராமசெட்டிபாளையம் பள்ளி வீதியில் பணியில் இருந்த போது, இரும்பு கம்பியை தூக்கியதாக தெரிகிறது. அப்போது, மேலே சென்ற மின்கம்பிகள் மீது இரும்பு பட்டதும், அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உடற்கூறு ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கருப்பையா பேரூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், உரிய பாதுகாப்பு இல்லாமல் பணியாற்ற வைத்த தனியார் நிறுவன உரிமையாளர், ஃபாஸில் ரஹ்மான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில், 17 வயதான அவரது மூத்த மகன், கடந்த ஆறு மாதமாக கோவை புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று அவர் ராமசெட்டிபாளையம் பள்ளி வீதியில் பணியில் இருந்த போது, இரும்பு கம்பியை தூக்கியதாக தெரிகிறது. அப்போது, மேலே சென்ற மின்கம்பிகள் மீது இரும்பு பட்டதும், அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உடற்கூறு ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கருப்பையா பேரூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், உரிய பாதுகாப்பு இல்லாமல் பணியாற்ற வைத்த தனியார் நிறுவன உரிமையாளர், ஃபாஸில் ரஹ்மான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.