கேரள மாநில வனப்பகுதியில் இன்று மாலை பற்றிய தீயானது, தமிழக எல்லையில் அமைந்துள்ள கங்கல் பகுதி வழியாக பரவி கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, ஆனைக்கட்டி தெற்கு சுற்றுக்குட்பட்ட நண்டுகுழி, பெருமாள் முடி சரிவு பகுதிகளில் பரவியுள்ளது.
கோவை: கேரள மாநில வனப்பகுதியில் இன்று மாலை பற்றிய தீயானது, தமிழக எல்லையில் அமைந்துள்ள கங்கல் பகுதி வழியாக பரவி கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, ஆனைக்கட்டி தெற்கு சுற்றுக்குட்பட்ட நண்டுகுழி, பெருமாள் முடி சரிவு பகுதிகளில் பரவியுள்ளது.
தீ பரவிய தகவலின் பேரில், தடாகம் பிரிவு வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள் மற்றும் கூலி ஆட்களுடன் தீ பரவி வரும் பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகங்களிலிருந்து 4 குழுவினர் தீயை கட்டுப் படுத்த விரைந்துள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.