'பேரறிவாளனுக்கு ஜாமீன்' உலக தமிழர்களுக்கு மகிழ்ச்சி - கு.ராமகிருஷ்ணன்

உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவானது உலக தமிழர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை: 30-ஆண்டுகள் சட்டப்போராட்டத்திற்கு பின் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவானது உலக தமிழர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 30-ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பின் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க பட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறும் போது:-

இராஜிவ் காந்தி கொலை வழக்கில் 32-ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் 7-தமிழர்களையும் விடுதலை செய்திட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், அதை மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநர் இருக்கும் ஒரு பட்சத்தில் இன்று உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் ஜாமீன் அளித்து உத்தரவு வழங்கியுள்ளது.

இது உலக தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் கூட கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே 10-ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் தீர்மானம் நிறைவேற்றியும், நீதிமன்றம் நிரபராதி எனக்கூறியும் விடுதலை செய்யவில்லை. இதை மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்துள்ளது. ஆனால் இன்று உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவானது மத்திய அரசுக்கு அளித்துள்ள சமிஞ்சை எனவும், இந்த வழக்கில் இனியாவது இந்த வழக்கில் எந்த தடையும் மத்திய அரசு விதிக்காமல் தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...