உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவானது உலக தமிழர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை: 30-ஆண்டுகள் சட்டப்போராட்டத்திற்கு பின் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவானது உலக தமிழர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 30-ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பின் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க பட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறும் போது:-
இராஜிவ் காந்தி கொலை வழக்கில் 32-ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் 7-தமிழர்களையும் விடுதலை செய்திட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், அதை மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநர் இருக்கும் ஒரு பட்சத்தில் இன்று உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் ஜாமீன் அளித்து உத்தரவு வழங்கியுள்ளது.
இது உலக தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் கூட கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே 10-ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் தீர்மானம் நிறைவேற்றியும், நீதிமன்றம் நிரபராதி எனக்கூறியும் விடுதலை செய்யவில்லை. இதை மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்துள்ளது. ஆனால் இன்று உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவானது மத்திய அரசுக்கு அளித்துள்ள சமிஞ்சை எனவும், இந்த வழக்கில் இனியாவது இந்த வழக்கில் எந்த தடையும் மத்திய அரசு விதிக்காமல் தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.