கோவை எட்டிமடை பேரூராட்சி துணைத் தலைவர் மரகதமணி பதவி ராஜினாமா..!

திமுக தலைமை கழகம் அறிவித்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றதால் கழகத்தின் அறிவிப்பை ஏற்று ராஜினாமா.


கோவை: கோவை எட்டிமடை பேரூராட்சி துணைத் தலைவர் மரகதமணி துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

கோவை மாவட்டம் எட்டிமடை பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளது. கடந்த 4ம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் போட்டியிட்டு கீதா ஆனந்தகுமார் எட்டிமடை பேரூராட்சி தலைவராகவும், மரகதமணி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து, வெற்றி பெற்ற தலைவர், துணைத் தலைவர்கள் முதலமைச்சரை சந்திக்க சென்னை சென்றனர். அப்போது ஆய்வு செய்த போது எட்டிமடை துணைத் தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக 12வது வார்டு கவுன்சிலர் சுகுணா செந்தில்குமாரை திமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது.

ஆனால், அறிவிப்பை மீறி திமுகவை சேர்ந்த 11வது வார்டு கவுன்சிலர் மரகதமணி போட்டியிட்டு வெற்றி பெற்றது தெரியவந்தது. இதனால் மரகதமணியை முதலமைச்சர் சந்திக்கவில்லை.

இந்நிலையில், தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஏற்கனவே திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்ததை ஏற்று, எட்டிமடை பேரூராட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மரகதமணி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்படி, இதற்கான ராஜினாமா கடிதத்தை எட்டிமடை பேரூராட்சி செயல் அலுவலர் சூசை இன்ப ராஜிடம் வழங்கினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...