பிரபல கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார் இருசக்கர வாகனம் மற்றும் ஒன்றரை கிலோ கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
கோவை: கோவையில் பிரபல கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் மீது ரத்தினபுரி காவல்நிலையத்தில் ஏற்கனவே அடிதடி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ரத்தினபுரி, சிவானந்தா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணா தலைமையில் தலைமை காவலர்கள் சுகந்தராஜா மற்றும் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் சாஸ்திரி நகர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியே வந்த உயர்தர இருசக்கர வாகனத்தில் வந்த மாணிக்கம் என்பவரை பிடித்து சோதனையிட்டதில் அவரிடம் 1.5 கிலோ எடையில் சிறு சிறு பொட்டலங்களில் மடித்து வைக்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த நபரை கைது செய்த போலீசார் இருசக்கர வாகனம் மற்றும் ஒன்றரை கிலோ கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் மீது ரத்தினபுரி காவல்நிலையத்தில் ஏற்கனவே அடிதடி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ரத்தினபுரி, சிவானந்தா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணா தலைமையில் தலைமை காவலர்கள் சுகந்தராஜா மற்றும் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் சாஸ்திரி நகர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியே வந்த உயர்தர இருசக்கர வாகனத்தில் வந்த மாணிக்கம் என்பவரை பிடித்து சோதனையிட்டதில் அவரிடம் 1.5 கிலோ எடையில் சிறு சிறு பொட்டலங்களில் மடித்து வைக்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த நபரை கைது செய்த போலீசார் இருசக்கர வாகனம் மற்றும் ஒன்றரை கிலோ கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.